என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அதிமுக நிர்வாகி கொலை
நீங்கள் தேடியது "அதிமுக நிர்வாகி கொலை"
சிவகங்கை அதிமுக நிர்வாகி கதிரேசன் கொலை வழக்கில் 11 பேருக்கு கீழ் நீதிமன்றம் விதித்த 3 ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. #MadrasHighCourt #SivagangaMurderCase
சென்னை:
சிவகங்கை மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் கதிரேசன், அவரது மகன் பிரசன்னா, கார் டிரைவர் பூமிநாதன் ஆகியோர் கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக முன்னாள் ஊராட்சி தலைவர் அர்ச்சுனன் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை அமர்வு நீதிமன்றம் 2015-ல் தீர்ப்பு வழங்கியது. அப்போது, 11 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவர்களுக்கு தலா 3 ஆயுள் தண்டனை விதித்தது. 10 பேர் விடுவிக்கப்பட்டனர்.
தண்டனையை எதிர்த்து 11 பேர் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, குற்றவாளிகள் தரப்பு வாதங்களை நிராகரித்த நீதிமன்றம், அவர்களுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த 3 ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. #MadrasHighCourt #SivagangaMurderCase
சிவகங்கை மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் கதிரேசன், அவரது மகன் பிரசன்னா, கார் டிரைவர் பூமிநாதன் ஆகியோர் கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக முன்னாள் ஊராட்சி தலைவர் அர்ச்சுனன் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை அமர்வு நீதிமன்றம் 2015-ல் தீர்ப்பு வழங்கியது. அப்போது, 11 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவர்களுக்கு தலா 3 ஆயுள் தண்டனை விதித்தது. 10 பேர் விடுவிக்கப்பட்டனர்.
தண்டனையை எதிர்த்து 11 பேர் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, குற்றவாளிகள் தரப்பு வாதங்களை நிராகரித்த நீதிமன்றம், அவர்களுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த 3 ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. #MadrasHighCourt #SivagangaMurderCase
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X